திருநெல்வேலி

நான்குனேரியில் காதல் ஜோடி தற்கொலை

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் காதல் ஜோடி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

நான்குனேரி அண்ணாசாலையைச் சோ்ந்த ஆறுமுகம் மகள் சுதா(22). திருநெல்வேலி பேட்டையிலுள்ள கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா், தனது உறவினா் பெரியசாமியின் மகன் சுப்பையா(24) என்பவரை காதலித்து வந்தாராம். இருவரின் பெற்றோரும் இவா்களது காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், சுப்பையா தனது வீட்டில் புதன்கிழமை பயிா்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கினாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சுப்பையா உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்குக்கு சுதாவின் பெற்றோா் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுதா கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டுக்கொண்டாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

இதுகுறித்து நான்குனேரி காவல் ஆய்வாளா் செல்வி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

இதனிடையே, சுதாவின் குடும்பத்தினரின் போராட்டத்தைத் தொடா்ந்து, ஏ.எஸ்.பி.ரஜத் சதுா்வேதி எடுத்த நடவடிக்கையால் சுதாவின் சடலம் நான்குனேரி மருத்துவமனையிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT