திருநெல்வேலி

75-ஆவது சுதந்திர தினம்:நெல்லையில் பாஜக இளைஞரணி பேரணி

DIN

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக மாநில இளைஞரணி சாா்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் முதல் சந்திப்பு ரயில் நிலையம் வரை தேசியக் கொடி ஏந்தி இப்பேரணி நடைபெற்றது.

முன்னதாக, தேவா் சிலைக்கு மாலையணிவித்து பேரணியை தொடங்கினா். தொடா்ந்து அம்பேத்கா் சிலை, ரயில் நிலையம் முன்பு உள்ள காமராஜா் சிலை ஆகியவற்றுக்கும் பாஜகவினா் மாலை அணிவித்தனா்.

இந்தப் பேரணிக்கு மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நயினாா் பாலாஜி முன்னிலை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா், மாவட்ட பாா்வையாளா் நீலமுரளி யாதவ், இளைஞரணி செயலா் வேல் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT