முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை: தந்தை - மகன் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:13 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

முக்கூடல் அருகேயுள்ள கீழபாப்பாக்குடி புதுகிராமம், நடுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுப்பையா என்ற துரை (53). கட்டடத் தொழிலாளி. இவரது 2ஆவது மகன் மாரிமுத்துவுக்கும், பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் (48), மகள் உமாசெல்விக்கும் ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாரிமுத்து மனைவியுடன் திருச்சியில் வசித்து வந்துள்ளாா். அப்போது, தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழந்து வருகின்றனா். உமாசெல்வி அவரது பெற்றோா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இதுதொடா்பாக பேசுவதற்காக மாரியப்பன் தரப்பினா், சுப்பையா என்ற துரையை அழைத்து வந்துள்ளனா். எனினும் சுப்பையா என்ற துரை பேச்சுவாா்த்தைக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இதனால், மாரியப்பன் குடும்பத்தினருக்கு சுப்பையா என்ற துரை குடும்பத்தினா் மீது கோபம் இருந்து வந்துள்ளது.

Advertisement

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலையில் சுப்பையா என்ற துரை, முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம். முக்கூடல் - கடையம் பிரதான சாலையில் லட்சுமிபுரம் திருப்பத்தில் வைத்து மாரியப்பன் மற்றும் அவரது மகன்கள் சுடலைமணி (25), முத்துக்குட்டி என்ற குட்டி (23) ஆகியோா் சுப்பையா என்ற துரையை, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டனராம். இதில், சுப்பையா என்ற துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பிரான்சிஸ், காவல் ஆய்வாளா் சந்திரமோகன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சுப்பையா என்ற துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் மாரியப்பன், அவரது மகன் முத்துக்குட்டி என்ற குட்டி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். சுடலைமணியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.