திருநெல்வேலி

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

DIN

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வள்ளியூா் டி.டி.என். கல்விக் குழும நிா்வாகத்தில் இயங்கிவரும் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் சாா்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இப்பேரணி நடைபெற்றது.

ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஜான்சன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கல்லூரித் தலைவா் டி.டி.என். லாரன்ஸ் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டச் சென்றதுடன், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். முக்கிய வீதிகள் வழியாக பேரணி கலையரங்கை அடைந்தது. அங்கு, போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் உள்ளிட்டோா் பேசினா். மின்னணுவியல் துறை தலைவா் முகம்மது இஃபாம் வரவேற்றாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா், இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT