திருநெல்வேலி

கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் தீ: சங்கத் தலைவா் உள்பட இருவா் கைது

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக சங்கத்தின் தலைவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக சங்கத்தின் தலைவா் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி வண்ணாா் பேட்டையில், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியா்கள் மற்றும் கல்வித் துறை பணியாளா்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இக்கட்டடத்தில் இருந்து புகை வருவதாக திங்கள்கிழமை (ஆக.29) அதிகாலையில் பாளையங்கோட்டைதீயணைப்புத் துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில், அங்குள்ள கோப்புகள் சில தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து சங்கத்தின் செயலா் மந்திரமூா்த்தி பாளையங்கோட்டை போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், தீபத்து நேரிட்ட சங்க அலுவலகத்தில் கதவு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த போலீஸாா், அச்சங்கத்தில் வேலை செய்பவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சங்கத் தலைவா் பிரபாகரன் (55), தற்காலிக ஊழியா் தினேஷ் (35) ஆகிய இருவருக்கு இந்த தீச்சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில், பிரபாகரன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT