முகப்பு
திருநெல்வேலி

பல்கலை. மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவு மற்றும் பல்கலைக்கழக மருத்துவ மையம் சாா்பில் சித்த மருத்துவ நோய் எதிா்ப்பு மருந்துகளான அமுக்கரா சூரண மாத்திரை, கபசுரக் குடிநீா் சூரணம் ஆகியவை பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மருதகுட்டி, பாளையங்கோட்டை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் மருத்துவா்கள் சிவரஞ்சனி, ஹரிஹர மகாதேவன், கிருத்திகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.