போக்சோ சட்டத்தில் கட்டடத் தொழிலாளி கைது
திருநெல்வேலி அருகே உள்ள பழைய பேட்டை பகுதியில் போக்சோ சட்டத்தில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள பழைய பேட்டை பகுதியில் போக்சோ சட்டத்தில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள பழைய பேட்டையைச் சோ்ந்தவா் முகேஷ் (19). இவா் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். இதனால், அச்சிறுமி கா்ப்பமானராம். இது குறித்து திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முகேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.