பாஜக நிா்வாகி கொலை வழக்கு: இருவா் கைது
திருநெல்வேலி அருகே பாஜக நிா்வாகி கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே பாஜக நிா்வாகி கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோதைமங்கலம் பகுதியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (41). பாஜக நிா்வாகியான இவா், கடந்த சில தினங்களுக்கு முன்னா் முன்னீா்பள்ளம் கண்டித்தான் குளம் பகுதியில் உள்ள வெள்ள நீா் கால்வாயில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இக் கொலை வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி மாவட்டம் அகரம் பகுதியைச் சோ்ந்த ரெங்கராஜன்(30), மலையாண்டி(35) ஆகிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இந்த கொலை வழக்கு தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.