முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் திருநெல்வேலியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் கடைகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் என்பதால் திருநெல்வேலியில் உள்ள இறைச்சிக்கடைகள், மீன் கடைகளில் மக்கள் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதில், இரவு நேர பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து, அன்றையதினம், அத்தியாவசிய சேவைகள் தவிர கடைகள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து, ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் பாளையங்கோட்டை, நகரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் சனிக்கிழமை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.