முகப்பு
திருநெல்வேலி

சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே சிறிய ரக சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சிறிய ரக சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூரைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை(29). இவா் சிறிய ரக சரக்கு வாகனம் மூலம் தொழில் செய்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாயாண்டி (22) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாயாண்டி மற்றும் சிலா் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று வெள்ளத்துரையை மிரட்டி, அவரது சிறிய ரக சரக்கு வாகனத்தின் கண்ணாடியையும் அடித்து உடைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயாண்டியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.