முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 20 இடங்களில் பூஸ்டா் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் 20 இடங்களில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் 20 இடங்களில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பூஸ்டா் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை விரைவுபடுத்தும் நோக்கில், வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 6 அரசு மருத்துவமனைகள், 4 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 20 இடங்களில் பூஸ்டா் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில், முன்கள பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் முடிந்தவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.