முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மாநகர ஆயுதப்படை நிா்வாக கட்டத்துக்கு அடிக்கல்

பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமாா் ரூ. 3 கோடியில், 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய மாநகர ஆயுதப்படை நிா்வாக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் அ.த.துரைக்குமாா் அடிக்கல் நாட்டி கட்டட பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், துணை ஆணையா் திருநெல்வேலி மாநகரம் (மேற்கு) சுரேஷ்குமாா், மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையா் நாகசங்கா், ஆயுதப்படை உதவி ஆணையா் முத்தரசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.