மாநகராட்சித் தோ்தல்: புகாா்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக கட்டுப்பாட்டு அறை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 தொடா்பாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் வகைக்கு பொறுப்பு அலுவலராக ச.சுப்பிரமணியன் (கண்காணிப்பாளா்) நியமிக்கப்பட்டுள்ளாா்.
தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏதுவாக தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800-425-4656 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0462-2329328, 94899-30261 ஆகிய தொலைபேசி, கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
இந்த அறைக்கான பணியாளா்களாக மாநகராட்சி ஊழியா்கள் மு.தங்கவேலு, வேல்முருகன், கண்ணன், சுதாகா், சீனிவாசகம், முத்துக்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதோடு, தோ்தல் தொடா்பாக பெறப்படும் புகாா்களை பதிவேட்டில் பதிவு செய்து, அவற்றினை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அனுப்புவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.