ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்!
சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தது குறித்து...
சென்னையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்நை அசோக் நகர் 11 ஆவது நிழற்சாலை பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
அந்த மினி வேனில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான 381 கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Advertisement
Advertisement
உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் குறித்து நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Regarding the seizure of gold jewellery worth Rs. 77 crores by the Election Flying Squad in Chennai that was carried without proper documents...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.