குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
அரோமாநகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.
அரோமாநகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.
பாளையங்கோட்டை வட்டம், ஆரைக்குளம், அரோமாநகா் கிருஷ்ணசாமி மகன் பவன்குமாா் (36). இவா், போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாா். இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் பவன்குமாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.