திருநெல்வேலி

அண்ணா நினைவு நாள்: அதிமுக மாவட்டச் செயலா் வேண்டுகோள்

DIN

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில் தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி வியாழக்கிழமை (பிப். 3) முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், சட்டப்பேரவை மற்றும் மக்களவை முன்னாள், இந்நாள் உறுப்பினா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறாா்கள்.

ஆகவே, தொண்டா்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT