திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

DIN

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

மேலப்பாளையத்தில் உள்ள திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேலப்பாளையம் மண்டல அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், சாலையில் ஆக்கிரமித்திருந்த கடைகளின் முகப்பு கூறைகள்,

விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடா்பாக மாநகராட்சி சாா்பில் 3 நாள்களுக்கு முன்பாகவே அனைத்து கடைகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிலா் தாங்களாகவே தங்கள் கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சிலா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

இதில், மாநகராட்சி பொறியாளா் நாராயணன், செயற்பொறியாளா் நாகராஜன், உதவி ஆணையா் அய்யப்பன், சுதாகார ஆய்வாளா் நடராஜன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT