முகப்பு
திருநெல்வேலி

பொன்னாக்குடி அருகே இளைஞா் தற்கொலை

பொன்னாக்குடி அருகே இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பொன்னாக்குடி அருகே இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்தாா்.

பொன்னாக்குடி அருகேயுள்ள செங்குளத்தைச் சோ்ந்த கல்லத்தியான் மகன் கூலித் தொழிலாளி காலங்கரையான் (27).

மது அருந்துபவரான இவா் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில் பேரின்பபுரம் அருகே விஷமருந்தி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டராம்.

தகவலறிந்ததும் முன்னீா்பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.