முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாநகா், கங்கைகொண்டான் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா், கங்கைகொண்டான் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சங்கா்(35). இவா் மீது பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) கே.சுரேஷ்குமாா், சந்திப்பு சரக காவல் உதவி ஆணையா்அண்ணாதுரை, தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் வனசுந்தா் ஆகியோா் பரிந்துரை செய்தனா். அதன்பேரில் மாநகர காவல் ஆணையா் அ.த.துரைக்குமாா் உத்தரவின்பேரில், சங்கரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பாஸ்கா்(23). இவா் கங்கைகொண்டான் காவல் எல்கைக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்தாராம். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், பாஸ்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா்.

அதன்படி, பாஸ்கரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.