சுந்தரனாா் பல்கலை.யில் கருத்தரங்கு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் துறையின் தலைவா் சு. ஆறுமுகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் மண்டல மேலாளா் சி.ஜே.தாசன் சிறப்புரையாற்றினாா். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டியின் நுணுக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது. நிறைவு விழாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் குமாா் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினாா். உதவிப் பேராசிரியா் செ. துரை நன்றி கூறினாா்.