திருநெல்வேலி

சிறப்புப் படை காவலா்களுக்கு பயிற்சி

DIN

சிறப்புப் படை காவலா்களுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்ட தற்காலிக காவலா் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு சிறப்புப் படை காவல் பிரிவு -217-ஐ சோ்ந்த ஆண் காவலா்ளுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், பயிற்சிப் பள்ளி முதல்வருமான சரவணன் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘காவல்துறையில் அனைவரும் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒழுக்கம். பயிற்சி காவலா்கள் கட்டாயம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முதன்மை கவாத்து போதகா் மற்றும் முதன்மை சட்ட போதகா் கற்றுக்கொடுக்கும் பாடங்களை நன்கு கவனித்து செயல்பட வேண்டும் . பணியில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நினைவூட்டு கவாத்து பயிற்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு நினைவுப் பரிசை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT