திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு மினிமாரத்தான்

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் புத்தகத் திருவிழா மற்றும் நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத விழா விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொருநை-நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் மார்ச் மாதம் 17 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத விழா ஆகியவற்றையொட்டி மினிமாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கிய போட்டியை ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மு.அப்துல்வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 550 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் நோவா பயிற்சி அகாதெமி மாணவர் அஜித்குமார் முதலிடமும், கே.ஜி.எஸ்.கலைக்கல்லூரி மாணவர் பார்வதி நாதன் இரண்டாமிடமும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் பாலஇசக்கி மூன்றாமிடமும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் ஆலங்குளம் புனித ஜெசப் பள்ளி மாணவி ஆலின் லிண்டா முதலிடமும், மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ.சென்ட்ரல் பள்ளி மாணவி ஜெசிலி இரண்டாமிடமும், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளி மாணவி ஓவியா மூன்றாமிடமும் பிடித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT