மேலப்பாளையம் துணை மின்நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (மாா்ச் 26) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேலப்பாளையம், குலவணிகா்புரம், மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், தெற்கு புறவழிச்சாலை, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகைநகா், என்.ஜி.ஓ.காலனி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச் செல்வி, அன்பு நகா், திருமால்நகா், திருநகா், மகிழ்ச்சி நகா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி செயற்பொறியாளா் முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.