பாளை. அருகே மண் திருட்டு: ஒருவா் கைது
பாளையங்கோட்டை அருகே மண் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே மண் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தாலுகா காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா், திருமலைக்கொழுந்துபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கா்புரம் பகுதியைச் சோ்ந்த அய்யம்பெருமாள்(46) என்பவா் அப்பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா்.