முகப்பு
கிரிக்கெட்

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கம்!!

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறியது தொடர்பாக...

Updated On : 26 மார்ச், 2026 at 11:06 AM
ஐபிஎல் கோப்பை - ANI
பகிர்:

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த காஷப்பனவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டுத் திடலில் தொடங்கவிருக்கிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கிடைப்பது எப்போதும் தட்டுப்பாடாகவே உள்ளது.

இதுகுறித்து பேசிய விஜயானந்த காஷப்பனவர், “ ஐபிஎல் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. கர்நாடகம் மாநில கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் டிக்கெட்டுகளை எம்.எல்.ஏ, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதில்லை.

கிரிக்கெட் சங்கம் அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால், எம்.எல்.ஏ.க்களை மதித்து டிக்கெட்டுகளை வழங்குவதில்லை. அதைக் கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். 5,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு டிக்கெட்டை நாம் 35,000 ரூபாய்க்கு வாங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.

summary

Congress MLA Vijayananda Kashyap has accused the Karnataka State Cricket Association of selling IPL tickets in the black market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.