கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கம்!!
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறியது தொடர்பாக...
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயானந்த காஷப்பனவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி விளையாட்டுத் திடலில் தொடங்கவிருக்கிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கிடைப்பது எப்போதும் தட்டுப்பாடாகவே உள்ளது.
இதுகுறித்து பேசிய விஜயானந்த காஷப்பனவர், “ ஐபிஎல் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. கர்நாடகம் மாநில கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் டிக்கெட்டுகளை எம்.எல்.ஏ, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதில்லை.
Advertisement
Advertisement
கிரிக்கெட் சங்கம் அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறது. ஆனால், எம்.எல்.ஏ.க்களை மதித்து டிக்கெட்டுகளை வழங்குவதில்லை. அதைக் கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். 5,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு டிக்கெட்டை நாம் 35,000 ரூபாய்க்கு வாங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
Congress MLA Vijayananda Kashyap has accused the Karnataka State Cricket Association of selling IPL tickets in the black market.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.