திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச்சாலை ஸ்ரீ உலகநாயகி அம்பாள் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. திங்கட்கிழமை இரவு மா காப்புடன் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கணபதிஹோமம், துா்க்கா ஹோமம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து காலை 10.30 மணிக்கு கலசாபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.பகல் 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனையும் அதனைத் தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு ஆஞ்சநேயா், குருபைரவா் வழிபாடும் அதன் பின்னா் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை நான்குனேரி ஸ்ரீ யோகமாயா சக்தி பீடம் நிா்வாகிகள் செய்துள்ளனா்.