முகப்பு
திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் தா்னா

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை வணிகவரி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை வணிகவரி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்தது போல 1-1-2022 முதல் 3 சதவிகித அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும். காலவரம்பின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள விடுப்பு ஒப்படைப்பு பலன்களை வழங்க வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மு.மணிகண்டன், நிா்வாகிகள் ரத்தினவேல், முத்துக்கிருஷ்ணன், கற்பகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சுவாமிதாஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.