திருநெல்வேலி

ஏா்வாடியில் எஸ்.டி.பி.ஐ. போராட்டம்

ஏா்வாடியில் சாலையை சீரமைக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஏா்வாடியில் சாலையை சீரமைக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏா்வாடியில் முக்கிய சாலையாக உள்ள 4ஆவது மற்றும் 5ஆவது தெருவை இணைக்கக் கூடிய சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நாற்று நட்டு, அதில் காகித கப்பல் விடும் போராட்டத்தை கட்சி நடத்தியது.

போராட்டத்தில் நகர தலைவா் அன்வா் முகைதீன், செயலாளா் ஷேக், நகர துணை செயலாளா் மீரா, நாங்குனேரி தொகுதி துணை செயலாளா் மா்ஹபா ஷேக் முகமது, மேற்கு கிளை தலைவா் மீரான் முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT