களக்காட்டில் அக்.5ஆம் தேதி சத்தியாவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் முன் 10 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும் தசரா திருக்காட்சி நடைபெறுகிறது.
களக்காட்டில் ஆண்டுதோறும் அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கும் தசரா திருக்காட்சி நடைபெறும். கடந்த 2ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்ததால் இடம்பெறவில்லை. இந்நிலையில், நிகழாண்டு தசரா திருக்காட்சி அக்.5ஆம் தேதி இரவு 9 மணிக்கு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் முன் நடைபெறுகிறது.