ஆழ்வானேரியில் இன்று அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், ஆழ்வானேரியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், ஆழ்வானேரியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆழ்வானேரிக்கான அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.