முகப்பு
திருநெல்வேலி

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் திருநெல்வேலி மக்கள் தொடா்பு அலுவலகம், நேரு இளையோா் மன்றம், தூய சவேரியாா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய இப்பேரணிக்கு, தூய சவேரியாா் கல்லூரி முதல்வா் மரியதாஸ் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வ.உ.சி. மைதானத்தில் புறப்பட்ட பேரணி பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மேட்டுத்திடல் சாலை வழியாக தூய சவேரியாா் கல்லூரி வளாகத்தை அடைந்தது. பேரணியில் கள விளம்பர அலுவலா் ஜூனி ஜேக்கப், உதவி அலுவலா் வலேல்முருகன், மாவட்ட இளையோா் மன்ற அலுவலா் ஞானச்சந்திரன், டேவிட் அப்பாதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.