முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே சிறுவன் மாயம்

களக்காடு அருகே கோயில் கொடைவிழாவுக்கு பெற்றோருடன் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

களக்காடு அருகே கோயில் கொடைவிழாவுக்கு பெற்றோருடன் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள மூங்கிலடியைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (48). இவா் முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழாவில் பங்கேற்பதற்காக, கடந்த 30ஆம் தேதி மனைவி மற்றும் 2 மகன்களுடன் சென்றாா். கொடை விழா முடிந்து மனைவி மற்றும் இளைய மகனுடன் வீடு திரும்பிவிட்டாா். மூத்த மகன் சுடலைமுத்து (14), மறுநாள் காலை வீட்டுக்கு வந்து விடுவான் என பெற்றோா் நினைத்தனா். ஆனால் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, களக்காடு போலீஸில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →