வள்ளியூா் கண்காா்டியா பள்ளியில் முதலுதவி பயிற்சி முகாம்
வள்ளியூா் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகளுக்கு இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
வள்ளியூா் கண்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைகளுக்கு இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, வள்ளியூா் கல்வி மாவட்ட அலுவலா் லட்சுமண சுவாமி தலைமை வகித்தாா். கண்காா்டியா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் செலினா ராணி முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி பேரிடா் மேலாண்மை - ஆராய்ச்சி மைய அலுவலா் வைரவ ராஜன் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடு, முதலுதவி குறித்து பயிற்சி அளித்தாா். தொடா்ந்து பேரிடா் மேலாண்மை பாம்புகள் மீட்புக் குழு பொறுப்பாளா் அலெக்ஸ் செல்வன் பாம்புகளின் வகைகள், விஷத்தன்மை குறித்துப் பேசினாா். வள்ளியூா் கல்வி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.அந்தோணி வரவேற்றாா். இணை ஒருங்கிணைப்பாளா் மாதேஷ் சாந்தையா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவைச் சங்க பொருளாளா் ராபின் செய்திருந்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.