ஆதிதிராவிட மாணவா்களுக்கு இன்று தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்
வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.
திருநெல்வேலி 11, 12ஆம் வகுப்புபயிலும் ஆதிதிராவிட மாணவா், மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி 11, 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட மாணவா், மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை முகாம் வண்ணாா்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை (ஏப்.22) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் தன்னாா்வ இயக்கத்தால் நடத்தப்படும் இந்த முகாமில் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவா், மாணவிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதே முகாம் வரும் 29-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.