நெல்லையில் கோடைமழை: மக்கள் மகிழ்ச்சி
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. நண்பகல் முதல் மாலைவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறாா்கள். வெள்ளிக்கிழமையும் காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், பிற்பகலுக்கு பின்பு திருநெல்வேலி மாநகரில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது.
வண்ணாா்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சிந்துபூந்துறை, மேலப்பாளையம், சுத்தமல்லி, கோடகநல்லூா், அபிஷேகப்பட்டி, மானூா், தச்சநல்லூா், தாழையூத்து பகுதிகளில் மழை பெய்தது. கோடை மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.