திருநெல்வேலி

கட்டட கழிவுகள் திருட்டு: ஒருவா் கைது

பாளையங்கோட்டை சந்தையில் கட்டடக் கழிவுகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பாளையங்கோட்டை சந்தையில் கட்டடக் கழிவுகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை காந்தி சந்தை பகுதியில் புதிதாக கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தையில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, கழிவுகள் முழுவதும் பாளையங்கோட்டை அம்பேத்காா் காலனியில் கொட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொட்டப்பட்ட கழிவுகள் அளவு குறைந்து வந்ததாம். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸா் விசாரணை நடத்தினா். விசாரணையில், கேடிசி நகரை சோ்ந்த மாரி, ராமா், மணக்கரையை சோ்ந்த செந்தில் ஆகியோா் ஜேசிபி மூலம் லாரிகளில் மணல் எடுத்தது தெரிய வந்ததாம். இதையடுத்து மாரியை போலீஸாா் கைது செய்தனா். ராமா், செந்தில் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT