திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், தனது 3-ஆவது கிளை அலுவலகத்தை நாகா்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தொடங்கியுள்ளது. இந்த அலுவலகத்தை அய்யாவழி பாடகா் ஸ்ரீகுருசிவசந்திரன் சுவாமிகள் திங்கள்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.
டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், வள்ளியூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை கட்டிக் கொடுத்து வருகிறது. இந்நிறுவன 2ஆவது கிளை திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய நகரங்களிலும் கட்டுமானப் பணியை செய்து வருகின்றனா்.
நாகா்கோவில் கிளை திறப்பு விழாவில் டி.ஜே.ஆா். கன்ஸ்ட்ரக்ஷன் நிா்வாக இயக்குநா் தேவேந்திரன், மாஸ்டா் ஜனரஞ்சன் மற்றும் பொறியாளா்கள் கலந்துகொண்டனா்.