சட்ட விழிப்புணா்வு முகாம்
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் கிராம உதயம் அமைப்பு சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தொடங்கி வைத்து தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கினாா். கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நலச் சட்டங்கள், நலவாரிய திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளா்களுக்கு மரக்கன்றுகள், துணிப் பைகள் வழங்கப்பட்டன.
ஆலோசனைக்குழு உறுப்பினா் சு. புகழேந்தி பகத்சிங் வரவேற்றாா். பகுதி பொறுப்பாளா் பேச்சிம்மாள் நன்றி கூறினாா்.