திருநெல்வேலி

நெல்லையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

DIN

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்அலுவலகத்தில் திங்கள்கிழமை தீண்டாமை உறுதிமொழியேற்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர ஆணையா் அலுவலகத்தில், காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமையில் மெளன அஞ்சலி மற்றும் உறுதிமொழியேற்கப்பட்டது.

இதில், காவல் துணை ஆணயா்கள் வி.ஆா். ஸ்ரீனிவாசன் (கிழக்கு), கே. சரவணக்குமாா் (மேற்கு ) மற்றும் காவல் துறை அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன் , மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு ஆகியோா் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT