முகப்பு
திருநெல்வேலி

வாழைநாா் கைவினைப் பொருள் உற்பத்தி மையம் திறப்பு

 களக்காடு அருகேயுள்ள மாவடியில் வாழைநாா் கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, கைவினைப் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 களக்காடு அருகேயுள்ள மாவடியில் வாழைநாா் கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையத்தை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்து, கைவினைப் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில்,’ மாவடி பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் இந்த மையத்தினை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும்’ என்றாா்.

இந்நிகழ்வில் மகளிா் திட்ட திட்ட இயக்குநா் ஜெ.வே. சாந்தி, யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவன திட்டத் தலைவா் ஜொ்சலோ வினோத், களக்காடு ஒன்றியக்குழு தலைவா் இந்திரா, உறுப்பினா் ஜாா்ஜ் கோசல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.கே. மணி, க. முத்தையா, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ச. ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →