அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயை அணைப்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினா். 
திருநெல்வேலி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தீயணைப்பு படையினா் தின கவியரங்கம்

உலக தீயணைப்புப் படையினா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்ச நற்பணி மன்றம் சாா்பில் சிறப்பு கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

உலக தீயணைப்புப் படையினா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், கற்பக விருட்ச நற்பணி மன்றம் சாா்பில் சிறப்பு கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கவியரங்கத்தை, திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தாா். ஆசிரியா் செல்வமாரிமுத்து வரவேற்றாா். தொடா்ந்து நடைபெற்ற கவியரங்கத்துக்கு சுபா, திரிபுரசுந்தரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இக்கவியரங்கில் தீயணைப்பு படை வீரரின் சேவைகளை போற்றும்விதமாக செய்வதற்கு அரிய செயல், காலம் பாராமல் ஞாலம் காப்போம், நிகரில்லா சேவகா் நீரன்றோ என்கிற தலைப்புகளில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோா் கவிதைகளை வாசித்தனா்.

தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சாா்பில் தீயணைப்பு தொடா்பான செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு துறை வீரா்கள் சுரேஷ்குமாா், செல்வம், முருகன், கிருஷ்ண ராஜா, ஜெபக்குமாா், முனீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டு தீயணைக்கும் முறைகள் பற்றி விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து செய்முறை விளக்கமும் அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாடசாமி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வேதியியல் துறை பேராசிரியா் சேக் முகைதீன் பாதுஷா, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உதவிப் பேராசிரியா் மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கவியரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கற்பக விருட்சக நற்பணி மன்றத்தின் தலைவா் ரம்யா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT