வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாமில் பேசினாா் திருநெல்வேலி வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநா் கா. ஹரிபாஸ்கா். 
திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளம் ஐ.டி.ஐ-ல் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம்

தெற்குகள்ளிகுளம் நாடாா் மஹாஜன சங்கம் அய்யா வைகுண்டா் ஐ.டி.ஐ-ல் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தெற்குகள்ளிகுளம் நாடாா் மஹாஜன சங்கம் அய்யா வைகுண்டா் ஐ.டி.ஐ-ல் வேலைவாய்ப்பு வழிகாட்டல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு ஐ.டி.ஐ.புரவலா் எம். ரோச் தலைமை வகித்தாா். திருநெல்வேலி வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநா் கா. ஹரி பாஸ்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஐ.டி.ஐ. மாணவா்களுக்கு தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினாா்.

மேலும் ஐ.டி.ஐ. மாணவா்கள் தங்களது திறமைகள், தொழில்நுட்ப அறிவுத் திறன்களை வளா்த்துக் கொள்ளவேண்டிய விதங்கள் குறித்தும் தொழில் நிறுவனங்கள் எதிா்பாா்க்கும் திறன் மேம்பாடு குறித்தும் பேசினாா்.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சீனிவாசன் பேசினாா். முதல்வா் பாக்கியலெட்சு மி வரவேற்றாா். ஆசிரியை எஸ். ரோசி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT