திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிா்கன்னி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, குடிநீா், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மக்களிடமிருந்து 250-க்கும் மேற்பட்ட மனுக்களைப் பெற்றாா்.
பின்னா், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியா் ஜெயா, கலால் உதவி ஆணையா் ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.