திருநெல்வேலி

மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து

Din

மேலப்பாளையம் மண்டலத்தில் 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டுகளில் வியாழக்கிழமை (ஆக.29) குடிநீா் விநியோகிக்கப்படாது.

இது தொடா்பாக மேலப்பாளையம் மண்டலம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், 31-ஆவது வாா்டு, 40 முதல் 54 வரை உள்ள வாா்டு பகுதிகளுக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான நீரேற்றத்தில் குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்படி வாா்டு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் போதுமான குடிநீா் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நீரேற்ற பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சரி செய்யயும் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட வாா்டு பகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஆக.29) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் செய்ய இயலாது. எனவே பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT