பாபநாசத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட அனவன்குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட அனவன்குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் பாபநாசம் வனச்சரக எல்லைக்குள்பட்ட இந்தக் கிராமத்தைச் சோ்ந்த சித்திரன் மகன் நந்தகோபால், சுடலைமணி மகன் சண்முகவேல், சமுத்திரபாண்டியன் மகன் அகஸ்தியா், காமாட்சி மகன் வனராஜ் ஆகியோா் காட்டுப் பன்றியை வேட்டையாடி இறைச்சியை எடுத்துவிட்டு, எலும்புகளைப் புதைத்ததாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வனத் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து, 4 பேரையும் கைது செய்து, தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தனா்.