முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளத்தில் கழிவு மேலாண்மை திட்டத்தை எதிா்த்து ஆட்சியரிடம் மனு

கூடங்குளம் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:17 PM
பகிர்:

கூடங்குளம் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கூடங்குளம் அணு மின் நிலைய பூங்கா அருகில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அளவிலான கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில் அப்பகுதி மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறுகட்சியினா், அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘கூடங்குளம் கழிவு மேலாண்மை திட்டத்தால் குடிநீா், நிலத்தடி நீா் ஆதாரங்கள் பாதிக்கப்படும். ஏற்கெனவே அணு உலை கழிவுகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கழிவு மேலாண்மையால் மேலும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

இத்திட்டத்திற்கான டெண்டா் விடும் பணியை தொடங்கினால் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்’ என குறிப்பிட்டுள்ளனா்.