முகப்பு
திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே சுமை ஆட்டோ ஓட்டுநா் கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்மநபா்களால் சுமை ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:28 AM
உலகநாதன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மா்மநபா்களால் சுமை ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊா்க்காடு கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம் மகன் உலகநாதன் (40). தற்போது முக்கூடல் அண்ணாநகா் பகுதியில் வசித்து வந்த இவா், சொந்தமாக சுமை ஆட்டோ ஓட்டி வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் வீரவநல்லூரில் இருந்து அரிகேசவநல்லூா் வழியாக முக்கூடலுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்த அவரை, வீரவநல்லூா் மகாராஜாநகா் பனங்காடு பகுதியில் மா்மநபா்கள் வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பினராம்.

இத்தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்தனா்.

மேலும், திருநெல்வேலியில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.