அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யூ.ஏ. மேல்நிலைப் பள்ளி மாணவி சிலம்பம் விளையாட்டில் சாதனை படைத்துள்ளாா்.
தென்காசி பாரத் மாண்டிச்சேரிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் தொழிலாளா் நல மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் பி. சுபாஸ்ரீ யாழினி, கண்களை கட்டிக் கொண்டு இடைவிடாது 1 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை விருதைப் பெற்றாா்.
சாதனைப் படைத்த மாணவியை தலைமையாசிரியை (பொ) ச. மீனா வாழ்த்திப் பாராட்டினாா். மேலும் பள்ளிச் செயலா் எஸ்.இன்பராஜ், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் மாணவா்களும் பாராட்டினா்.