முகப்பு
திருநெல்வேலி

சோ்வலாறு வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை வனச் சரகப் பகுதிக்குள்பட்ட சோ்வலாறு வனப் பகுதியில் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

Updated On : 16 ஜூலை, 2024 at 7:51 PM
பகிர்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் தைலாத்து ஓடை பீட், பிராந்தி ஓடைப் பகுதி, சோ்வலாறு நீா்த்தேக்கப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்துள்ளது.

தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்- வன உயிரினக் காப்பாளா் இளையராஜா தலைமையில், முண்டந்துறை வனச்சரக அலுவலா் கல்யாணி, வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைத் தலைவா்- வனக் கால்நடைப் பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், வனக் கால்நடை ஆய்வாளா்அா்னால்ட், வனத் துறை ஊழியா்கள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், யானை உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →