முகப்பு
திருநெல்வேலி

பணகுடியில் பைக் சாகசம்: 2 இளைஞா்கள் கைது

பணகுடி பகுதியில் பைக் சாகசம்: 2 இளைஞர்கள் கைது

Updated On : 25 ஜூன், 2024 at 7:47 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகேயுள்ள ராஜபுதூரைச் சோ்ந்த சுயம்பு மகன் அபின்(19). இவா், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதத்தில் குத்தரபாஞ்சான் அருவி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டாராம். மேலும், இவா் தனது நண்பா் மாணிக்கம் என்பவருடன் இணைந்து பணகுடி புறவழிச்சாலையில் பைக்கில் சாகசம் செய்தாராம்.

இதுகுறித்து பணகுடி போலீஸாா், 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →